Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு மாவட்டத்தில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
சனி, 22 மார்ச் 2008 (14:09 IST)
ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்டதாகும். இங்க ு‌ ளள மக்களில் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாயத்தை சார்ந்த தொழில்களை நம்பியே உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் மழை இல்லாத காரணத்தால் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கிணற்றில் தண்ணீர் வற்ற தொடங்கியது.

இதனால் விவசாயிகள் வாழ்க்கை பின்னோக்கி செல்லும் நிலையும் ஏற்பட்டது. இதேபோல் சத்தியமங்கலம், அந்தியூர் பகுதியில் உள்ள வனப்பகுதிகளிலும் காய்ந்துபோக தொடங்கியது.

வனப்பகுதிக்குள் இருக்கும் குளம் மற்றும் குட்டைகளில் தண்ணீர் வற்றியதால் வனவிலங்குகள் தண்ணீரை தேடி கிரமாங்களுக்கு படையெடுக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரத்திலும் இரவு நேரங்களிலும் மழை பெய்ய தொடங்கிவிட்டது.

ற்று இரவு விடிய, விடிய மழை பெய்துகொண்டே இருந்தது. ஈரோடு மாவட்டம் பவானியில் 1.40 மி.மீ. மழையும் தாராபுரம்11.00 ம.மீ., கோபி10.00 மி.மீ., காங்கயம்8.20 மி.மீ., பெருந்துறை 1.00 மி.மீ., சத்தியமங்கலம்4.00 மி.மீ., மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் பெய்த இந்த திடீர் மழையால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

கள்ள காதலி வீட்டில் மர்மான முறையில் இறந்த கள்ளக்காதலன் : போலீசார் விசாரணை!

வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு நேரில் வந்து மிரட்டல்- மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் மதுரை ஆதீனம் பேச்சு!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

Show comments