Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோயா புண்ணாக்கு ஏற்றுமதி பாதிப்பு!

Webdunia
செவ்வாய், 18 மார்ச் 2008 (12:16 IST)
இந்தியாவில் இருந்து அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சோயா புண்ணாக்கு குறைந்துள்ளது.

இந்த நிதி ஆண்டில் பிப்ரவரி மாத இறுதிவரை 33.8 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற நிதி ஆண்டின் 11 மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.85 விழுக்காடு குறைவு.

சோயா புண்ணாக்கு ஏற்றுமதி நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்திருந்தாலும், இந்த எண்ணெய் வருடத்துடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளது.

இது குறித்து சோயா எண்ணெய் ஆலைகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் அகர்வால் கூறும் போது,
இந்த எண்ணெய் ஆண்டில் சோயா எண்ணெய் ஆலைகளின் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவு முன்னேறியுள்ளது.
2007 அக்டோபர் முதல் 2008 பிப்ரவரி வரை சோயா புண்ணாக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

இந்த ஐந்து மாதங்களில் 26.18 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற எண்ணெய் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ( ஐந்து மாதம ்) 19.20 விழுக்காடு அதிகம். சென்ற வருடம் 21.96 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டது என்று கூறினார்.

சோயா புண்ணாக்கு மாட்டு தீவனம், கோழி தீவனம் போன்றவைகள் தயாரிக்க பயன்படுகிறது. இந்தியாவில் இருந்து அதிக அளவு சோயா புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், இதன் விலை உள்நாட்டில் அதிகரிக்கிறது. இந்த ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும் என்று கால்நடை, கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கூறிவருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

கள்ள காதலி வீட்டில் மர்மான முறையில் இறந்த கள்ளக்காதலன் : போலீசார் விசாரணை!

வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு நேரில் வந்து மிரட்டல்- மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் மதுரை ஆதீனம் பேச்சு!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

Show comments