Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்களாதேசிற்கு 3 மாதத்தில் 5 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி!

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2008 (17:49 IST)
பங்களாதேசிற்கு ஒரு டன் அரிசி ரூ.15,760-க்கு ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நிலவிய கடும் புயலால் கடற்கரை வழியாக 5.5 லட்சம் டன் அரிசி பங்களாதேசிற்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில ், இந்தாண்டிற்கான அரிசி விலை நிர்ணயம் குறித்து இரு நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கடந்த நான்கு நாட்களாக கொல்கத்தாவில் கலந்து பேசினர்.

அதில் மூன்று மாதத்தில் 5 லட்சம் டன் அரிசியை பங்களாதேசிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பட ி, இரண்டு மாதத்திற்கு 2 இரண்டு லட்சம் டன்னும ், மூன்றாவது மாதத்தில் ஒரு லட்சம் டன்னும் அரிசி ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து பங்களாதேசிற்கு அரிசி கொண்டு செல்லப்படுகிறது.

ரயில ், சாலைப் போக்குவரத்து மற்றும் ஆறுகளின் வழியாக அரிசியை இறக்குமதி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளத ு. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் மீது இரண்டு அரசிடமும் உரிய அனுமதி பெறப்பட்ட பிறகு அரிசி ஏற்றுமதி செய்யப்படும ். இந்த மாதத்தில் முதற்கட்ட அரிசி பெறப்படும் என்று எதிர்பார்ப்பதா க, பங்களாதேஷ் உணவுத்துறை செயலர் அயுப் மியா கூறினார்.

பங்களாதேசில் டிசம்பர் மாதம் வரை உணவு பொருட்களுக்கான பற்றாக்குறை விகிதம் நகரப்பகுதிகளில் 15.77 விழுக்காடும ், கிராமப்புற பகுதிகளில் 13.91 விழுக்காடுமாக உள்ளத ு. அதனால் குறிப்பாக அரிசி மற்றும் மாவு மீதான விலை கட்டாயம் அதிகரிக்கும் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழாவே மாநாடு போல் அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி!

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

கள்ள காதலி வீட்டில் மர்மான முறையில் இறந்த கள்ளக்காதலன் : போலீசார் விசாரணை!

வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு நேரில் வந்து மிரட்டல்- மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் மதுரை ஆதீனம் பேச்சு!

Show comments