Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணை மூடப்பட்டது!

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2008 (14:11 IST)
கா‌விரி பாசன பகுதிகளில் நெற்பயிர் விளைச்சல் முடிந்து, அறுவடை செய்ய தயாராக உள்ளது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் தேவையில்லை என்பதால் மேட்டூர் அணை நேற்று மாலை மூடப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து கா‌விரி பாசன பகுதிகளுக்கு கட‌ந்த ஜூன் 17ஆ‌ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து 225 நாட்கள் தண்ணீர் திறந்து விட்ட பின், நேற்று மாலை மூடப்பட்டது.

கா‌விரி பாசன பகுதிகளில் நெற்பயிர் விளைச்சல் முடிந்து, அறுவடை செய்ய தயாராக உள்ளது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் தேவையில்லை என்பதால் மூடப்பட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொழில் நுட்ப காரணங்களுக்காக சிறு அளவு தண்ணீர் வெளியேற்றப்படும். நேற்று மாலை நீர் மட்டம் 94.67 அடியாக இருந்தது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி. அணைக்கு விநாடிக்கு 422 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

இந்த ஆ‌ண்டு ம‌ட்டு‌ம் மேட்டூர் அணை 7 முறை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments