Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோதுமை இறக்குமதி இல்லை : பவார்!

Webdunia
சனி, 19 ஜனவரி 2008 (18:32 IST)
கோதுமை தேவையான அளவு இருப்பில் உள்ளதால், தற்சமயம் கோதுமை இறக்குமதி செய்யும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்.

டெல்லியில் பிக்கி என்று அழைக்கப்படும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் சரத்பவார் கலநது கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

தற்போது கோதுமை தேவையான அளவு இருப்பு உள்ளது. அத்துடன் இந்த பருவத்தில் கோதுமை விளைச்சல் நிர்ணயித்துள்ள இலக்கு அளவை எட்டிவிடும். எனவே உடனடியாக கோதுமை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

மத்திய அரசு சர்வதேச சந்தையில் கோதுமையின் விலையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. கோதுமை விளையும் பல நாடுகளில் பற்றாக்குறை உள்ளது. இதனால் சர்வதேச சந்தையிலும் கோதுமை விலை அதிகரித்து உள்ளது.. தற்போது சர்வதேச சந்தையில் சிவப்பு நிற கோதுமை தான் கிடைக்கின்றது. இதை இங்குள்ள மக்கள் விரும்புவதில்லை. இதனால் தான் கோதுமை இறக்குமதி செய்வதை தாமதப்படுத்தி வருகின்றோம் என்று அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழாவே மாநாடு போல் அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி!

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

Show comments