Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லுக்கு ரூ.1,000. மாநிலங்களவையில் ஆதரவு!

Webdunia
புதன், 21 நவம்பர் 2007 (19:47 IST)
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.1,000 வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மாநிலங்களவையில் கட்சி வேறுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தெலுங்கு தேச உறுப்பினர் ரவுலா சந்திர சேகர ரெட்டி கோதுமைக்கு வழங்குவது போல் நெல்லுக்கும் குவின்டாலுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூ.1,000 வழங்க வேண்டும் வேண்டும். ஆந்திராவில் நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டமடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். விவசாயிகளை துயரத்தில் இருந்து காப்பாற்ற மத்திய அரசு தாமதிக்காமல் நெல்லுக்ககான ஆதரவு விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா பேசுகையில், நாடு முழுவதும் உள்ள நெல் விவசாயிகள் படும் துயரங்களை விளக்கினார். தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் நெல்லுக்கான ஆதார விலையை அதிகரிக்க கோரி நவம்பர் 27 ந் தேதி போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசு தாமதிக்காமல் நெல் விலையை குவின்டாலுக்கு ரூ.1,000 என அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

Show comments