Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல் ‌விலை குவிண்டாலுக்கு ரூ.1,000 உயர்த்த கோரி பா.ஜ. 13ஆ‌ம் தேதி ஆர்ப்பாட்டம்!

Webdunia
புதன், 7 நவம்பர் 2007 (09:59 IST)
நெல் விலையை குவிண்டாலுக்கு 1,000 ரூபாயாக குவிண்டாலுக்குப ா.ஜ.க. சார்பில் 13 ஆ‌ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் அறிவித்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், மத்திய அரசு கோதுமைக்கு அடிப்படை ஆதார விலையை உயர்த்திய அளவு நெல்லுக்கு உயர்த்தவில்லை. நெல்லுக்கும் 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முதல்-மந்திரி ஆந்திராவில் இதுகுறித்து காட்டிய ஆர்வமும், எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி காட்டும் ஆர்வமும் தமிழக அரசு காட்டவில்லை.

எனவே, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ஆதார விலை 1,000 ரூபாய் வழங்கவேண்டும் என்கின்ற கோரிக்கையை பிரதானமாக வலியுறுத்தி தமிழகத்தில் 9 இடங்களில் இம்மாதம் 13-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களின் விவசாயிகளுக்கான ஆர்ப்பாட்டம் மதுராந்தகத்தில் 13-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் எ‌ன்று இல.கணேச‌ன் கூ‌றியு‌‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

Show comments