Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணை‌க்கு 48,000 கனஅடி ‌நீ‌ர்வரத்து

-எமது ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2007 (09:36 IST)
கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிக‌ளி‌ல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் கனமழையால், அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இதனா‌ல் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று பிற்பகலில் 45 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 110 அடியாக இருந்தது. இன்று விழாக்கிழமை காலை எட்டு மணிக்கு அணையின் நீர்மட்டம் 112.00 அடியாக உயர்ந்தது.

அணைக்கு வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் அணையின் நீர் மட்டம் ஏழு அடி உயர்ந்துள்ளது.
நீர்வரத்து இதே அளவு நீடித்தால் ஐந்து நாளில் அணை நிரம்ப வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளதால், டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து வெளியேற்றும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 1900 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. இதில் டெல்டா பகுதி பாசனத்திற்காக ஆயிரம் கனஅடி செல்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் ஓட்டுனர்களை சந்தித்து குறைகள் கேட்ட ராகுல் காந்தி.. இந்த யோசனை யாருக்கும் வரவில்லையே..!

இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு..!

சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை..! வி.சி.க. - காங்கிரஸ் குற்றச்சாட்டு.!!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திருமாவளவன் கண்டனம்..! குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. கமல்ஹாசன் இரங்கல்..!

Show comments