Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் நிலையங்களில் காய்கறி, பழக்கடைகள்!

Webdunia
சனி, 6 அக்டோபர் 2007 (15:50 IST)
இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் விவசாய விளை பொருட்களின் சில் லர ை விற்பனை கடைகளை அமைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளத ு. இதற்காக ரயில்வே நிலத்தில் சில்லரை விற்பனை கடைகளை அமைக் க, ஆர்வமுள்ள தனியார் துறையினரிடம் இருந்து விருப்ப வேண்டு கோளை ரயில்வே கேட்க உள்ளத ு.

இந்த திட்டத்தின் படி பெருநகரங்கள் (சென்ன ை, டெல்ல ி, கல்கத்த ா, மும்ப ை) தவிர மற்ற நகரங்களில் ரயில்வே வசம் பயன்படாமல் உபரியாக இருக்கும் இடத்தில் தனியார் துறையினருக்கு பழங்கள ், காய்கறி போன்ற விவசாய விளைபொருட்களை விற்பனை செய்யும் சில்லரை விற்பனை கடைகளை அமைக்க அனுமதி தரப்படும ்.

இது பற்றி ரயில்வேயின் உயர் அதிகாரி கூறுகையில ், ரயில்வே வசம் பயன்படுத்தப் படாமல் காலியாக இருக்கும் இடங்களில் பழங்கள ், காய்கறி போன்ற விவசாய விளைபொருட்களை விற்பனை செய்யும் சில்லரை விற்பனை கடைகளை அமைக்க தனியார் துறையினருக்கு நிலம் வழங்கப்படும ். அத்துடன் மின்சாரம ், தண்ணீர் போன்ற தேவையான வசதிகள் செய்து தரப்படும ்.

ரயில்வேயின் நிதி நிலை அறிக்கை (பட்ஜெட ்) தாக்கல் செய்யப்பட்ட போத ு, பொதுத்துறையும ், தனியார் துறையும் இணைந்து விவசாய பொருட்களை விற்பனை கடைகளை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டத ு. ஆனால் அதற்கு பிறகு குறிப்பிட்டு கூறும் படியாக எந்த முயற்சியும் செய்யவில்ல ை.

பொதுத் துறை தனியாருடன் இணைந்து விவசாய விளை பொருட்களை விற்பனை செய்யும் சில் லர ை விற்பனை நிலையங்களை அமைப்பதில் பல்வேறு பிரச்சனைகள் அடங்கியுள்ளன.

இதனால் ரயில்வே துற ை இந்த சங்கிலித் தொடர் கடைகளை அமைக்க ஆர்வம் உள்ள பெரிய அளவிலான தனியார் நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளிடம் இருந்து விருப்பத்தை கேட்டுள்ளது. இதற்கான பொறுப்பு ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு சங்கிலித் தொடர் போன்று பரந்த அளவில் விற்பனை நிலையங்களை அமைத்திருக்கும் நிறுவனங்கள், சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஆர்வம் காண்பிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இதன் நோக்கம் வேகமாக வளர்ந்து வரும் சில் லர ை விற்பனை துறையின் பயன்கள் விவசாயிகளுக்கும், கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே. அத்துடன் குறைந்த மற்றம் நடுத்தர தூரங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்து அதிகரிக்க வேண்டும் என்பதாகும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.! அண்ணாமலை காட்டம்..!!

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையா? சசிகலா கண்டனம்..!

ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் பேரிழப்பு: ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து உதயநிதி..!

ரயில் ஓட்டுனர்களை சந்தித்து குறைகள் கேட்ட ராகுல் காந்தி.. இந்த யோசனை யாருக்கும் வரவில்லையே..!

Show comments