Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயத்திற்கு தினமும் 6 மணி நேரம் மின் வினியோகம் தேவை

Webdunia
சனி, 7 ஜூலை 2007 (18:43 IST)
திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆசீஷ்வச்சானி தலைமையில், விவசாயிகள், மின் அதிகாரிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் வழக்கறிஞர் அய்யாக்கண்ணு, ராஜா சிதம்பரம், சிவசூரியன், மாசிலாமணி, கணேசன் ஆகியோர் பேசும் போது மின் உற்பத்தி குறைந்துவிட்டது. அதனால் தான் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருந்து வந்ததாகவும், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை 6 மணி நேரம் விவசாய பம்பு செட்டுகளுக்கு மின்சார விநியோகம் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பதில் தெரிவிக்கையில், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் தமிழக அரசுக்கு உடனடியாக தெரிவிக்கப்படும் என்றார்.

இக்கூட்டத்தில் விவசாய பம்பு செட்டுகளுக்கு மாதக் கணக்கில் மின் இணைப்பு தாரததையும் சுட்டிக் காட்டப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments