மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி முடிவடைந்து வெற்றி பெற்றவர்களின் விவரம் வெளியிடப்பட்டு வருகின்றன.
வெற்றி பெற்றவர்களின் விவரம் இங்கு உடனுக்குடன் வழங்கப்படும்.
வெற்றி பெற்றவர்களின் விவரங்களைப் பார்ப்போம்.
பொள்ளாச்சியில் அதிமுக வேட்பாளர் சுகுமார் 3,05,935 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் 2,59,910 வாக்குகள் பெற்றுள்ளார்.
அரக்கோணத்தில் திமுக வேட்பாளர் 4,11,453 வாக்குகள் பெற்று பாமக வேட்பாளர் 3,03,630 வாக்குகள் பெற்று 2ம் இடத்தில் உள்ளார்.
காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் 3,111 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். விஸ்வநாதன் 3,30,217 வாக்குகளும், ராமகிருஷ்ணன் 3,27,134 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
சிவகங்கையில் அதிமுக வேட்பாளர் ராஜா கண்ணப்பன் வெற்றி பெற்றுள்ளார்.
திருவள்ளூரில் அதிமுக வேட்பாளர் வேணுகோபால் 3,68,294 வாக்குள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் காயத்ரி ஸ்ரீதரன் 3,36,671 வாக்குகள் பெற்றுள்ளார்.
தென்காசியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லிங்கம் 281174 வாக்குகள் பெற்று 34,677 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் வெள்ளை பாண்டியன் 2,46,497 வாக்குகள் பெற்று 2ம் இடத்தில் உள்ளார்.
சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 4,28,516 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் பொன்னுசாமி 3,29,102 வாக்குகள் பெற்று 2ம் இடத்தில் உள்ளார்.
தர்மபுரியில் திமுகவின் தாமரை செல்வன் 3,65,812 வாக்குகள் பெற்று 35,942 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் செந்தில் 2,29,870 வாக்குகள் பெற்றுள்ளார்.
கரூரில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வெற்றி பெற்றுள்ளார்.
திருப்பூரில் அதிமுக வேட்பாளர் சிவசாமி 2,95,737 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.கே. கார்வேந்தன் 2,10,355 வாக்குகள் பெற்று 2ம் இடத்தில் உள்ளார்.
தென்சென்னை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் 32,446 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சிட்லபாக்கம் ராஜேந்திரன் 2,98,739 வாக்குகளும், ஆர்.எஸ். பாரதி 2,66,293 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் ரித்திஷ் 2,94,945 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சத்தியமூர்த்தி 2,25,030 வாக்குகள் பெற்று 2ம் இடத்தில் உள்ளார்.
கோவையில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் நடராஜன் 38,664 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நடராஜன் 2,93,165 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ஆர். பிரபு 2,54,501 வாக்குகள் பெற்று 2ம் இடத்தில் உள்ளார்.
நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ. ராசா 3,16,802 வாக்குகள் பெற்று வெற்றியுள்ளார். மதிமுக வேட்பாளர் கிருஷ்ணன் 2,30,756 வாக்குகள் பெற்று 2ம் இடத்தில் உள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து பாமக வேட்பாளர் பேராசிரியர் ராமதாஸ் போட்டியிட்டார்.
நாகப்பட்டினத்தில் திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் 47,962 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெபற்றுள்ளார்.
ஈரோடு தொகுதியில் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை எதிர்த்து போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி 47,343 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தஞ்சையில் திமுக வேட்பாளர் பழனி மாணிக்கம் 1,05,723 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கடலூரில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ். அழகிரி 23,532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்தாக்கூர் (2,59,808 வாக்குகள்) வெற்றி பெற்றார். மதிமுக வேட்பாளர் வைகோ தோல்வி அடைந்தார். இவர் 2,47,155 வாக்குகள் பெற்றார்.
காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் 3,111 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திண்டுக்கல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சித்தன் 3,61,545 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் பாலசுப்ரமணியன் 3,07,198 வாக்குகளும் பெற்று 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தேனியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம். ஆரூண் 5,542 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
வடசென்னையில் திமுக டி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.
மதுரையில் திமுக கட்சி வேட்பாளர் மு.க. அழகிரி வெற்றி பெற்றுள்ளார்.
திருச்சி அதிமுக வேட்பாளர் குமார் வெற்றி 4,319 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலாவை வீழ்த்தினார்.
கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் ஆதிசங்கர் வெற்றி பெற்றுள்ளார்.