Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர்களுக்கு அடிக்க உரிமை இல்லை

Webdunia
மாணவர்களை அடிக்க ஆசிரியர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெ‌ரி‌வி‌த்த ுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு கிராமத்துப் பள்ளியில் 10வது படித்த அரவிந்த் யோகி என்ற மாணவன், தன்னை வகுப்பு ஆசிரியர் கண்ணத்தில் அறைந்ததால் அவமானம் அடைந்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டான்.

இது குறித்து அந்த ஆசிரியர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம் ஆசிரியருக்கு 5 நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் ஆகியோர் அடங்கிய அமர்வு, பாடம் கற்பிக்கும்போது மாணவர்களை அடிக்க ஆசிரியர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர்.

மேலும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிடவும் மறுத்துவிட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறும் மூவர்.. பிரிட்டன், அமெரிக்கர்கள்..!

நாளை 3 மாவட்டங்களில் அதிகனமழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதி.. சிவசேனா தொண்டர்கள் அதிர்ச்சி..!

பள்ளி கல்வித்துறை நடத்தும் பொதுத்தேர்வு அட்டவணையை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்!

மத்திய அரசின் கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்றினால் கல்விக்கான நிதியை விடுவிக்கும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

Show comments