Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரிக்குலேஷன் தேர்வு புதன‌‌ன்று ஆரம்பம்

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2009 (11:04 IST)
மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் புதன்கிழமை தொடங்குகின்றன.

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10-ம் வகுப்பு மெட்ரிக்குலேஷன் மற்றும் ஆங்கிலோ-இந்தியன் தேர்வுகள் புதன்கிழமை தொடங்கி ஏப்ரல் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 128 பள்ளிகளில் இருந்து ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 787 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

ஆங்கிலோ-இந்தியன் தேர்வை 4 ஆயிரத்து 697 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். ஓ.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை ஆயிரத்து 361 ஆகும். தேர்வு மையங்களில் மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. மாணவர்கள் கலந்து அமர்ந்து தேர்வு எழுதுவார்கள். மொத்தம் 2 ஆயிரத்து 788 மையங்களில் தேர்வு நடக்கிறது.

பிளஸ்-2 தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதைப் போல 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கும் மாவட்ட கல்வி அதிகாரிகளால் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி தேர்வு மையத்தை ரத்து செய்யவும், அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பரிந்துரை செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவரைப்பேட்டை ரயில் விபத்து! கும்மிடிப்பூண்டி தடத்தில் ரயில்சேவை மொத்தமாக நிறுத்தம்!

தவறான சிக்னலால் தடம் புரண்ட ரயில்!? விபத்துக்கு இதுதான் காரணமா?

தொழில்நுட்ப கோளாறு; திருச்சியை 2 மணி நேரமாக வட்டமடித்த விமானம்! - பத்திரமாக தரையிறங்கியது!

கவரைப்பேட்டையில் பயணிகள் ரயில் மோதி கோர விபத்து! பற்றி எரியும் ரயில் பெட்டிகள்! - பயணிகள் நிலை என்ன?

பக்கவாதத்தை சரிசெய்ய பரிகாரம்!? 8 லட்ச ரூபாய் அபேஸ் செய்த தம்பதி கைது!

Show comments