Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்ஆர்எம் நிறுவனத்தில் ஆங்கிலம் பேச பயிற்சி

Webdunia
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (11:34 IST)
எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று நடந்த இதன் துவக்க விழாவில் ஆங்கிலப் பயிற்சியாளர் ஆல்பர்ட் பி ராயன், ஆங்கிலப் பயிற்சி மையத்தைத் துவக்கி வைத்தார்.

இது குறித்து அதன் தலைவர் லட்சுமி நரசிம்மன் கூறுகையில், ஆங்கிலம் பேசுவதற்கான பயிற்சியும், அனைத்து நுழைவுத் தேர்வு போட்டிகள் மற்றும் வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் பயிலும் 1000 மாணவர்களை தேர்வு செய்து இலவசமாக ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்படும்.

தமிழகத்தில் 31 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இந்தியா முழுவதும் 124 மையங்கள் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

Show comments