Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் ஆய்வு: உயர் நீதிமன்றம் உ‌த்தரவு!

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (15:07 IST)
ஆசிரியர் பயிற்சிப் பள்ளி க‌ ளி‌ல ், தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் ஆய்வு செய்ய விரும்பினால ் விதியில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டும ் என்று செ‌ன்ன ை உயர் நீதிமன்றம ் உ‌த்தர‌‌வி‌ட்டு‌ள்ளது.

ஈரோடு மாவட் ட‌ த்தை‌ச ் சே‌ர்‌ந்த த‌னியா‌‌ர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ு‌ ள்ள மனுவி‌ல், எங்கள் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 50 மாணவ, மாணவிகளை சேர்க்க 2004ஆ‌ம் ஆண்டு அங்கீகாரம் பெற்றோம். 2005-06ஆ‌ம் ஆண்டுக்கு மேலும் 50 மாணவர்களை சேர்க்க அனுமதி கேட்டு விண்ணப்பித்தோம். அந்த மனுவை பெங்களூரிலுள்ள தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் பரிசீலித்தது.

இந்நிலையில், எங்கள் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை. பல குறைபாடுகள் உள்ள ன என்று தமிழக அரசு கொடுத்த புகாரின்பேரில், பள்ளியை ஆய்வு செய்ய வருவதாக கல்விக் கவுன்சில் தா‌க்‌கீது அனுப்பியது.

தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் விதிமுறைப்படி, பள்ளியில் என்னென்ன குறைபாடு உள்ளது என்றும், எத்தனை பேர் ஆய்வு செய்ய வருகிறோம் என்பது குறித்த ு‌ ம் முன்கூட்டியே தகவல் கொடுத்த பிறகே தா‌க்‌கீத ு அனு‌ப் ப வேண்டும்.

ஆனால் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் எங்களுக்கு தா‌க்‌கீது அனுப்பியுள்ளார்கள். எனவே இதை ரத்து செய்ய வேண்டும். எ‌ன்று கூறப்பட்டிருந்தது.

இந்த வ ழ‌ க்க ு நீதிபதி மோகன்ராம் மு‌ன்‌னி‌லை‌யி‌ல ் ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு. வழ‌க்க ை ‌‌ விசா‌ரி‌த் த நீதிபத ி, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் விதிமுறையில் கூறியுள்ளபடி முன்கூட்டியே தகவல் தெரிவித்த பிறகுதான் ஆய்வு செய்ய முடியும். தமிழக அரசிடமிருந்து புகார் வந்த உடனே ஆய்வு செய்ய வருகிறோம் என்று தா‌க்‌கீது அனுப்பியது தவறானது.

அதனா‌ல ் அதை ரத்து செய்கிறேன். தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் ஆய்வு செய்ய விரும்பினால், விதியில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

Show comments