தொழிற்பயிற்சி நிலையங்களில் கைவினைஞர் பயிற்சி

Webdunia
சனி, 11 ஆகஸ்ட் 2007 (11:14 IST)
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கைவினைஞர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்க ு 10-ம் வகுப்ப ு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ச ெய ்தி குறிப்பில ், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்டு 2007-ம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. சில அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் இருக்கைகள் காலியாக உள்ளன. இதில் சேர தகுதி பெற்ற மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதற்கான விவரங்களை அருகில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை அணுகிப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் வரும் 22-ந் தேதி ஆகும்.

தகுதியுள்ள மாணவ, மாணவியர் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சிறப்பு ஆணையர் மற்றும் ஆணையர் ப.சிவகாமி தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அரசுக்கு முட்டு கொடுப்பதன் மூலம் தனித்தன்மையை இழந்து வரும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்: அரசியல் விமர்சகர்கள்

தூய்மை பணியாளர்கள் கொரானோ காலத்தில் தியாகிகள்.. இப்போது கண்டுகொள்ளப்படாதவர்களா?

ஒரு பெண்ணின் ஒரு நாள் உரிமை என்பது வெறும் ரூ.33 தானா? ரூ.1000 உரிமை தொகை குறித்து நந்தகுமார் கேள்வி..!

வைகோ நடைபயண அழைப்பிதழில் பிரபாகரன் படம்: அதிருப்தியில் புறக்கணித்த காங்கிரஸ்!

சோத்த திங்கிறியா இல்ல... இந்து அமைப்பினரிடம் கடுப்பாகி கத்திய சேகர் பாபு!...

Show comments