கொலுவில் ஒவ்வொரு நாளும் பாட வேண்டிய பாடல்களை ராகத்துடன் அளித்துள்ளோம்.
முதல் நாள்
தேவியைப் பற்றிய பாடல்களை தோடி ராகத்தில் பாடுவது சிறப்பானது.
பாடல்: கற்பகவல்லி நின்
ராகம்: ராகமாலிகா
ராகம்: ஆனந்த பைரவி
webdunia photo
WD
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாயம்மா தேவி (கற்பகவல்லி) பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட (கற்பகவல்லி)
ராகம்: ஆனந்த பைரவி
நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால் நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ? ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள? ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா (கற்பகவல்லி)
ராகம்: கல்யாணி
எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும் நல்லாட்சி செய்திடும் நாயகியே நித்ய கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா (கற்பகவல்லி)
பைந்தமிழ் மலர்ப்பாமாலை சூடி உன் பாதமலர்ப் பணிந்து பாடவும் வேண்டும் சிந்தையும் என் நாவும் என்னேரமும் நின் திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும் பந்த உலகில் மதிமயங்கி அறுபகைவர் வசமாய் அழியாமல் அருள்பெற வேண்டும் இந்த வரம் தருவாய் ஜகத ீ °வரி எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி என் (அம்பா)
ஆறாம் நாள்:
தேவியைப் பற்றிய பாடல்களை நீலாம்பரி ராகத்தில் பாடுவது சிறப்பு.
பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ பஞ்சமி பரமேஷ்வரி வேண்டும் வரம் தர இன்னும் மனமில்லையோ வேத வேதாந்த நாத ஸ ்வரூபிணி (ஜகத்)
எட்டாம் நாள்:
தேவியின் பாடல்களை புன்னாகவராளி ராகத்தில் பாடுதல் நலம்.
பாடல்: ஸ்ரீசக்ர ராஜ ராகம்: ராகமாலிகா
ராகம்: செஞ்சுருட்டி
ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசன ே °வரி ஸ்ரீலலிதாம்பிகையே புவன ே °வரி
ஆகம வேத கலாமய ரூபிணி அகில சராசர ஜனனி நாராயணி நாக கங்கண நடராஜ மனோஹரி ஞான வித்யேஷ்வரி ராஜராஜ ே °வரி (ஸ்ரீசக்ர)
ராகம்: புன்னாகவராளி
பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆடவும் பாடிக் கொண்டாடும் அன்பர் பத மலர் சூடவும் உலகம் முழுதும் என் அகமுறக் காணவும் ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஷ்வரி (ஸ்ரீசக்ர)
ராகம்: நாதனாமக்ரியை
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய் உயரிய பெரியோர்கள் ஒன்றிடக் கூட்டி வைத்தாய் நிழலெனத் தொடர்ந்த முன்னாள் கொடுமையை நீங்கச் செய்தாய் நித்ய கல்யாணி பவானி பத்மேஷ்வரி (ஸ்ரீசக்ர)
ராகம்: சிந்து பைரவி
துன்பப் புடத்திலிட்டு தூயவனாக்கி வைத்தாய் தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய் அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய் அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்ட ே °வரி (ஸ்ரீசக்ர)
மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி தேந்தமிழ் சொல்லெடுத்துப் பாடவந்தோமம்மா பாடவந்தோமம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ - இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா (மாணிக்க)
நாமணக்கப் பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய் பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் (மாணிக்க)
வெள்ளை தாமரையில் வீற்றிருப்பாய் - எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே - என்றும் அள்ளி அருளைத் தரும் அன்னையும் நீயே
வாணி ச ரஸ ்வதி மாதவி பார்கவி வாகதீஸ்வரி மாலினி காணும் பொருள்களில் தோன்றும் கலைமணி வேண்டும் வரம் தரும் வேணி நீ நான்முக நாயகி மோஹன ரூபிணி நான்மறை போற்றும் தேவி நீ வானவர்க்கினிதே தேனருள் சிந்தும் கான மனோஹரி கல்யாணி (அருள்வாய்) (மாணிக்க)
தசமி அன்று:
பாடல்: கருணை தெய்வமே கற்பகமே
வரிகள்: மதுரை ஸ்ரீநிவாசன் ராகம்: சிந்து பைரவி தாளம்: ஆதி
கருணை தெய்வமே கற்பகமே காணவேண்டும் உந்தன் பொற்பதமே என் (கருணை)
உறுதுணையாக என் உள்ளத்தில் அமர்ந்தாய் உன்னையன்றி வேறு யாரோ எம் தாய் (கருணை)
ஆனந்த வாழ்வு அளித்திட வேண்டும் அன்னையே எம்மேல் இரங்கிட வேண்டும் நாளும் உன்னைத் தொழுதிடல் வேண்டும் நலமுடன் வாழ அருளல் வேண்டும் (கருணை)