Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிதாக கிடைக்கும் புதினாவில் உள்ள மருத்துவகுணங்கள் என்ன...?

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (17:57 IST)
புதினா மலச்சிக்கலை நீக்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.


புதினாவை நீர் சேர்க்காமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால் தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.

புதினாக் கீரையானது மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினா சாற்றை முகத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும். சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாவை குடிநீர் போல தயார் செய்து குடித்து வர எரிச்சல் குறையும்.


புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்துக் குடித்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். புதினாக்கீரை துவையலை வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயங்களில் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வாந்தி வருவது இயல்பானது. அந்த நேரங்களில் புதினாக்கீரையை சாப்பிட்டால் கர்ப்பிணிகளின் அதிகப்படியான வாந்தி நிற்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறைச்சி உணவு: உடலுக்கு நல்லதுதான், ஆனால் அளவோடு! சமீபத்திய ஆய்வுகள் சொல்வது என்ன?

குழந்தைகள் காய்கறிகளை விரும்பி சாப்பிட சில எளிய வழிகள்!

பால் சேர்க்காத பிளாக் காபி: அதிகாலையில் அருந்தினால் ஆயுள் அதிகரிக்குமா? ஆய்வுகள் சொல்வது என்ன?

இயற்கையாகவே சருமத்தை ஜொலிக்க வைக்கும் பழங்கள்!

8 டம்ளர் தண்ணீர் போதுமா? உடலுக்கு எவ்வளவு நீர் தேவை?

அடுத்த கட்டுரையில்
Show comments