Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரட் ஜூஸ் தினமும் பருகுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன...?

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (16:44 IST)
தினந்தோறும் கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு எலும்புகள் வலுவடைந்து, அதன் உறுதித்தன்மையும் அதிகரிக்கும்.


தினமும் கேரட் ஜூஸ் அருந்துவது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேர்மானத்தை கட்டுக்குள் வைக்கிறது.

ரத்த காயங்கள் ஏற்படும் போது ரத்தம் விரைவாக உறைவதற்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் புரதம் சரியான அளவில் இருக்க வேண்டும். கேரட் ஜூஸ் அருந்தி வருவதால் இதன் அளவு சமநிலையில் வைக்கப்படுகிறது.

கேரட்டில் கண் பார்வை சிறப்பாக இருப்பதற்கான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. கேரட் ஜூஸ் தினமும் பருகி வந்தால் கண்பார்வை மேம்படும். கண்புரை நோய் ஏற்படுவது தடுக்கப்படும்.

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காரணமாக சிலருக்கு அதிக வயிற்று வலி மற்றும் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. அப்படி அவதியுறுபவர்கள் கேரட் ஜூஸ் அருந்த நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கேரட் ஜூஸ் அருந்தி வருவது சிறந்தது. இதிலுள்ள வேதிப்பொருட்கள் ரத்தத்தில் நோய்யெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, தொற்று வியாதிகளை விரைவாக குணப்படுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யோகா பயிற்சிக்கான சரியான நேரம் மற்றும் வழிமுறைகள்!

இறைச்சி உணவு: உடலுக்கு நல்லதுதான், ஆனால் அளவோடு! சமீபத்திய ஆய்வுகள் சொல்வது என்ன?

குழந்தைகள் காய்கறிகளை விரும்பி சாப்பிட சில எளிய வழிகள்!

பால் சேர்க்காத பிளாக் காபி: அதிகாலையில் அருந்தினால் ஆயுள் அதிகரிக்குமா? ஆய்வுகள் சொல்வது என்ன?

இயற்கையாகவே சருமத்தை ஜொலிக்க வைக்கும் பழங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments