Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில அற்புத பயன் தரும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

Webdunia
திங்கள், 9 மே 2022 (12:56 IST)
வெந்தயத்தை நெய் சேர்த்து வறுத்து பொடி செய்து மோரில் போட்டு குடிக்க வயிற்று வலி நீங்கும்.


கற்பூரத்தை தேங்காய் எண்ணையில் சேர்த்து நன்கு சூடாக்கி ஆர வைத்து தினம் 2 வேளை நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

புதினா இலையை நிழலில் காய வைத்து உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஓரிரு நாளில் பல் கூச்சம் குணமாகும்.

கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாய்ப் புண் குணமாகும். மற்றும் கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி 2 வேளை ஆறாத புண்ணில் போட்டால் சீக்கிரம் புண் குணமாகிவிடும்.

குளிக்கும் போது தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம். வெந்தயத்தை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி குடித்து வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவற்றை கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடிசாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகவும் அழகாகவும் பிறக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த சோகை குறைய வேண்டுமா? தினமும் ஒரு முந்திரி பழம் சாப்பிடுங்கள்..!

நினைவாற்றல் குறைபாடு ஏற்பட என்னென்ன காரணங்கள்?

உடலில் இருக்கும் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு.. இரண்டின் வேலைகள் என்ன?

தூக்கம் வரவில்லை என்றால் தூக்க மாத்திரை வேண்டாம்.. இதோ இயற்கையான சில பொருட்கள்..!

முகம் பளிச்சென மாற வேண்டுமா? கடுக்காய் பொடி ஒன்று இருந்தால் போதும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments