Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சளியை முற்றிலும் விரட்டும் தூதுவளை துவையல் செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
தூதுவளைக் கீரை - 3 கப்
உப்பு - தேவைக்கேற்ப
காய்ந்த மிளகாய் 3
உளுந்து - 3 ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் - 2 சிட்டிகை
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்

செய்முறை: 
 
முதலில் தூதுவளைக் கீரையை அதிலுள்ள முட்களை நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். முதலில் சிறிதளவு எண்ணெயில் கீரையை வதக்கவும். பிறகு  அதே கடாயில் உளுந்தையும் வத்தல் மிளகாயையும் தனித்தனியே வறுக்கவும்.


தூதுவளை கீரை, உளுந்து, மிளகாயுடன் புளி, உப்பு, பெருங்காயம் சேர்த்து லேசா தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும். பின்பு பரிமாறவும். சுவையான ஆரோக்கியம் நிறைந்த தூதுவளை துவையல் தயார்.
 
குறிப்பு: இந்த துவையலுடன், 2 பல் பூண்டு, தேவைப்பட்டால் இஞ்சி ஒரு துண்டு, சிறிதளவு மிளகு சீரகம் சேர்த்தும் துவையல் அரைக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

நெல்லிக்காய் இஞ்சு ஜூஸ் குடித்தால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

கோடை காலத்தில் சூவையான பலாப்பழ பாயாசம் செய்வது எப்படி?.

சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?

வெயில் காலத்தில் காலை வேளையை சிறப்பாக துவங்க இந்த உணவுகளை எடுத்துக்கலாம்..!

அடிக்கடி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments