Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரைக்கீரையை தொடர்ந்து உண்டு வருவதால் கிடைக்கும் பலன்கள் !!

Webdunia
அரைக்கீரை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது. குடல் புண்கள் விரைவில் குணமாகும்.அரைக்கீரையில் உள்ள இரும்புசத்து நரம்பு தளர்ச்சியை சரிசெய்து நரம்புகளுக்கு பலத்தை அளிக்கிறது.

அரைக்கீரையை தினமும் உண்டு வந்தால் தேக பலமும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.இதயம் வலிமை பெறும்.குடல் சுத்தமாக இருக்கும்.சித்த மருத்துவதிலும்  இந்த அரைக்கீரையின் பங்கு மிகவும் முக்கியதூவம் வாய்ந்தது. இந்த விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்தது.
 
இந்த கீரையை தொடர்ந்து, உண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நூரையீரல் நோய்கள் நீங்கும். வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரிசெய்யும்.  நரம்புகளை வலுப்படுத்தும்.
 
அரைக்கீரையோடு பூண்டு, மிளகு, பெருங்காயம், இஞ்சி, வெங்காயம், உப்பு சேர்த்து கடைந்து சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சிறு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
 
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் கீரையை சேர்த்து வரலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் சீரான வளர்ச்சி  அடையும். மூளை வளர்ச்சி உண்டாகும்.
 
இதன் தண்டுகளை கழுவி எடுத்து பூண்டு, மிளகு, இஞ்சி சேர்த்து ரசம் செய்து சாப்பிடலாம். அரைக் கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி புரதச்சத்து,  சுண்ணாம்பு சத்து, நார்ச் சத்து அதிக அளவில் உள்ளது.
 
இந்தக் கீரையோடு சுக்கு, மிளகு, வெங்காயம், பெருங்காயம், பூண்டு, நெய் சேர்த்து உணவாக சாப்பிட்டு வந்தால் வாத சம்பந்தப்பட்ட வியாதிகள் குணப்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு ஏற்படும் தீங்குகள்..!

உடலுக்கு தேவையான புரதச் சத்துக்கள் உணவுகள் என்னென்ன?

காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் என்னென்ன?

ஆஸ்துமா நோய் ஏற்படுவது ஏன்? குணப்படுத்த என்ன வழிகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments