Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் உணவில் பெருஞ்சீரகம் சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் பயன்கள் !!

Webdunia
இயற்கை முறையில் உடல் எடையை குறைக்க பெருஞ்சீரகம் உதவுகிறது. தினமும் வெந்நீரில் இந்த சீரகம் சேர்த்து அல்லது பொடியாக்கி நீரில் கலந்து குடிந்து வந்தால் தேவையில்லாத கொழுப்பு கரையும்.

அதிகாலையில் மற்றும் இரவு தூங்கும் நேரத்தில் சீரக எண்ணெய் நெற்றி, தலை, மூக்கு, நெஞ்சு ஆகிய இடங்களில் தேய்ப்பதன் மூலம் தலைவலி மற்றும் மூக்கு அடைப்பு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
 
பெண்களுக்குப் பிரசவத்திற்குப் பிறகு முடி அதிகமாகக் கொட்டும். கொட்டாமல் இருக்க பெருஞ்சீரக எண்ணெயை தலையில் தேய்த்து குளித்து வந்தால், முடி கொட்டும் பிரச்சனை நீங்கும்.
 
இச்சீரகத்தை பொடியாக்கி பால் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் புண்கள் ஆகியவை மறையும்.
 
தினமும் உணவில் சேர்த்து கொண்டால் செரிமான சீராக நடைபெறும். மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்க முடியும். மேலும் அஜீரண பிரச்சனை நீங்கும்.
 
வயிற்றில் பூச்சி தொல்லையால் அதிக அளவு ஊட்டச்சத்துக் குறைப்பாடு காணப்படும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. இப்பிரச்சனையில் இருந்து விடுபட பெருஞ்சீரகத்தினை பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் எல்லாம் வெளியேறிவிடும்.
 
சில நேரங்களில் ஏற்படும் விக்கல் தண்ணீர் குடித்தாலும் நிக்காது, அதற்கு பெருஞ்சீரகத்தை மோரில் கலந்து குடித்தால் விக்கல் நின்று விடும்.
 
பெருஞ்சீரகம் தினமும் உண்பதால் ரத்தம் சுத்திகரித்து, ரசாயன கழிவுகளை உடலில் இருந்து வெளியே அகற்றுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுண்டல் அவித்து சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின்கள்.. ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்..!

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் என்னென்ன?

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

தக்காளியில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

முழங்கால் செயற்கை தசைநார் சிகிச்சை! தமிழகத்தில் முதலிடம்! – ரெலா மருத்துவமனை!

அடுத்த கட்டுரையில்
Show comments