Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதாம் பால் குடிப்பதால் ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதா...?

Webdunia
நட்ஸ் அலர்ஜி உள்ளவர்கள் பாதாம் சாப்பிடுவதை தவிர்க்கவும். இதனால் முகத்தில் வீக்கம் குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

பாதாம் பால் உங்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இது உங்களின் ஆரோக்கியத்திற்கு பல ஆபத்துக்களை ஏற்படுத்தும்.
 
பாதாம் பால் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் என்று அனைவரும் நினைக்கிறார்கள், ஆனால் உண்மை இதற்கு எதிர்மாறானதாகும்.
 
பாதாம் பால் குடிப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது, மாறாக நாளடைவில் அவர்களின் செயல்பாடுகளில் இது சிக்கல்களை  ஏற்படுத்தும்.
 
லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளவர்கள் பாதாம் பால் அதிகம் குடிப்பது பல பக்க விளைவுகளை உண்டாக்கும். அத்தகைய நபர்கள் பாதாம் பாலை உட்கொண்ட பிறகு  ஒவ்வாமை ஏற்படலாம், எனவே, அதை முழுமையாக உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
 
பாதாம் பாலை உட்கொள்வது அரிப்பு, சரும அழற்சி மற்றும் படை நோய் போன்ற தோல் எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கும். இந்த எதிர்வினைகள் பெரும்பாலும்  பாதாம் பாலை உட்கொண்ட 10 நிமிடங்கள் முதல் 1 மணி நேரத்திற்குள் தோன்றும்.
 
பாதாம் பாலின் பக்க விளைவுகளில் மூச்சுத்திணறல் மற்றும் சுவாச பிரச்சினைகள், மூச்சுத்திணறல் மற்றும் சிக்கலான சுவாசம் ஆகியவையும் அடங்கும். குறிப்பாக  ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் பாதாம் பால் குடிப்பது அவர்கள் நோயின் தீவிரத்தை அதிகரிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

ஆஸ்துமா நோய் ஏற்படுவது ஏன்? குணப்படுத்த என்ன வழிகள்?

வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஏன்?

நீண்டநேரம் உட்கார்ந்து வேலை பார்த்தால் வரும் இடுப்புவலி.. நிவாரணம் என்ன?

வாயுக்கோளாறு ஏற்படுவது ஏன்? தீர்வு என்ன?

ஆசனவாயில் வெள்ளை புழுக்கள் பிரச்சனைக்கு என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments