Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 ரூபாயில் மூன்று வேளை சாப்பாடு: எங்கு தெரியுமா??

Webdunia
ஞாயிறு, 9 ஏப்ரல் 2017 (11:24 IST)
உத்தரப்பிரதேச முதல் மந்திரியாக யோகி ஆதித்ய நாத் பதவி ஏற்றதும் பல திட்டங்களை அறிவித்து வருகிறார்.


 
 
தற்போது உத்தரப்பிரதேசத்தில் ‘அன்னபூர்ணா கேன்டீன்’ என்ற பெயரில் உணவகம் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
 
இங்கு காலை உணவு ரூ.3-க்கும், மதியம் மற்றும் இரவு உணவு தலா ரூ.5-க்கும் என மொத்தம் மூன்று வேளை சாப்பாடு ரூ.13-க்கு வழங்கப்படும். 
 
மாநிலம் முழுவதும் 14 மாநகராட்சி பகுதிகளில் அன்னபூர்ணா கேன்டீன் தொடங்கப்படும் என தெரிகிறது. இதற்காக பயனாளிகளுக்கு பிரீபெய்டு கார்டுகள், டோக்கன்கள் வழங்கப்படும்.
 
காலையில் டீயுடன், இட்லி, சாம்பார், பருப்பு, பக்கோடா, கச்சோரி ஆகியவையும், மதியம் மற்றும் இரவில் 6 சப்பாத்திகள், காய்கறி, பருப்பு சால்னா ஆகியவை எவர் சில்வர் தட்டுகளில் வழங்கப்படும். 
 
அனைத்து கேன்டீன்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். இதற்காக சுத்திகரிப்பு சாதனங்கள் நிறுவப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments