Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா முடிஞ்சதும் ராமர் கோவில் போகலாம்! – யோகி ஆதித்யநாத்!

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (13:55 IST)
உத்தர பிரதேசத்தில் நடந்த வால்மீகி ஜெயந்தியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், கொரோனா முடிந்ததும் அனைவரும் ராமர் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் சித்ரகூட் லாலாபூர் கிராமத்தில் உள்ள வால்மீகி ஆசிரமத்தில் நடைபெற்ற வால்மீகி ஜெயந்தியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் ஒவ்வொரு உத்தர பிரதேச மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினோம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக அது இயலாமல் போனது.

கொரோனா வைரஸ் முடிந்ததும், மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்திலிருந்து ராமர் தரிசனம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments