Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஆன்டி-ரோமியோ படை – யோகி அதித்யநாத் அதிரடி

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (19:35 IST)
உத்தர பிரதேசத்தில் பெண்களிடம் வரம்பு மீறுபவர்களை கையும் களவுமாக பிடிக்க யோகி ஆதியநாத் உருவாக்கிய ஆன்டி-ரோமியோ படை மீண்டும் செயல்பட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2017ல் உத்தர பிரதேச முதல்வராக பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத் பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்தார். அதில் ஒன்றுதான் இந்த அன்டி-ரோமியோ படை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் புரிவோரை உடனடியாக பிடித்து சட்டத்தின் படி தண்டனை வழங்குவதற்காக இந்த படையை அவர் உருவாக்கினார். ஆனால் இந்த படையால் காதலர்கள் சிலர் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. அதைதாண்டி பல வித கண்டனங்களும் எழுந்ததால் அந்த திட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை உத்தர பிரதேசத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது. மோடிக்கு ஒரு குஜராத் போல, யோகிக்கு உத்தர பிரதேசம். எனவே அதன் சட்ட திட்டங்களில், ஒழுங்கு நடவடிக்கைகளில் அதிகம் கவனம் செலுத்துகிறார். எனவே தற்போது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை குறைக்கவும், அதில் ஈடுபடுவோரை தண்டிக்கவும் மீண்டும் ஆன்டி-ரோமியோ படையை செயல்படுத்த போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓசூரில் டைடல் தொழில்நுட்பப் பூங்கா..! தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு

இன்று ஒரே நாளில் சுமார் 880 ரூபாய் தங்கம் விலை உயர்வு.. 66 ஆயிரத்தை நெருங்கியது ஒரு சவரன்..!

கருணாநிதி நினைவு நாணயத்தில் ₹.. தூக்கி எறிந்துவிடுமா திமுக? அன்புமணி கேள்வி..!

பட்ஜெட் தாக்கலின்போது அமளி: அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு..!

TN Budget 2025 Live Updates: தமிழ்நாடு பட்ஜெட் 2025 முக்கியமான அறிவிப்புகள்!

அடுத்த கட்டுரையில்