Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.251க்கு ஸ்மார்ட்போன் தருவதாக அறிவித்த தொழிலதிபர் கைது

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (11:40 IST)
ரூ.251-க்கு ஸ்மார்ட்போன் தருவதாக அறிவித்து சுமார் 30ஆயிரத்துக்கும் அதிகமான பேர்களிடம் பணம் பெற்ற ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின், நிறுவனர் மோகித் கோயல் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 
 
உபி மாநிலத்தை சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் ‘ப்ரீடம் 251’ என்ற பெயரில் உலகிலேயே குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் தருவதாக அறிவித்தது. இந்த ஸ்மார்ட்போனை ரூ.251-க்கு அறிமுகம் செய்வதாகவும், இந்த போனை வாங்க விரும்புபவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது
 
இந்த அறிவிப்பை நம்பி ஏராளமானோர் முன்பதிவு செய்தனர். முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே சுமார் 30 ஆயிரம் பேர் ஆர்டர் செய்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்ய முயன்றதால் அந்த நிறுவனத்தின் இணையதளமே முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.. 
 
இந்த நிலையில் அறிவிக்கப்பட்டபடி முன்பணம் பெற்றவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஏராளமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்  ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மோகித் கோயல் திடீரென டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் ஸ்மார்ட்போன் தருவதாக கூறி ஏமாற்றியதற்காக கைது செய்யப்படவில்லை என்பதும், அவர் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments