Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை ராணுவ படை தலைமை இயக்குனராக அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம்

எஸ்எஸ்பியின் தலைமை இயக்குனராக அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம்

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2016 (05:28 IST)
மத்திய அரசின் எஸ்எஸ்பியின் தலைமை இயக்குனராக அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம் செய்யப்படுள்ளார்.
 

 
கடந்த 1980ஆம் ஆண்டில், தமிழகத்திலிருந்து, ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட அர்ச்சனா ராமசுந்தரம், தமிழக போலீசில் பல பதவிகளை வகித்துள்ளார்.
 
இவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைமை இயக்குனராக இருந்த போது, மத்திய அரசு பணிக்காக அர்ச்சனா ராமசுந்தரத்தின் பெயரை கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு அனுப்பியது.
 
இதனையடுத்து, அர்ச்சனா ராமசுந்தரத்தை சிபிஐ கூடுதல் இயக்குனராக கடந்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி மத்திய அரசு நியமித்தது.
 
ஆனால், தமிழக அரசு பணியில் இருந்து அர்ச்சனா ராமசுந்தரம் விடுவிக்கப்படாத நிலையில், அவர், சிபிஐ கூடுதல் இயக்குனராக பொறுப்பேற்றார். இதனால், அவரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அவரை, சஸ்பெண்ட் செய்தது.
 
பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு, கடந்த ஜூன் மாதம் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் இயக்குனராக மத்திய அரசு நியமித்தது.
 
இந்நிலையில், மத்திய அரசின் துணை ராணுவ படை பிரிவு, சாஸ்த்ரா சீமா பால் எஸ்எஸ்பியின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு நியமிக்கப்படும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை அர்ச்சனா ராமசுந்தரம் பெறுகிறார். 
 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments