Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முஸ்லீமாக மாறவில்லை என்றால் ஆபாச படத்தை வெளியிடுவோம்: இந்து பெண்ணை மிரட்டிய கணவன் வீட்டார்

முஸ்லீமாக மாறவில்லை என்றால் ஆபாச படத்தை வெளியிடுவோம்: இந்து பெண்ணை மிரட்டிய கணவன் வீட்டார்
, செவ்வாய், 14 ஜூன் 2016 (11:42 IST)
இந்து பெண்ணை முஸ்லீமாக மாறுமாறு கட்டாயப்படுத்திய மாமியார் கைது செய்யப்பட்டார்.


கொல்கத்தாவை சேர்ந்த இந்து மதபெண் ஒருவர், பீகார் மாநிலம் பாட்னாவைச்சேர்ந்த முஸ்லீம் இளைஞர் ஆசிப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணமான சில நாட்கள் கழித்து அந்த பெண்ணை மாட்டிறைச்சி சாப்பிடுமாறு மாமனார் மற்றும் மாமியார் வற்புறுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி அந்த பெண்ணை முஸ்லீமாக மாறுமாறு கட்டாயப்படுத்தினர். அப்பெண்ணின் கணவரிடம் இது குறித்து கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது கணவர் ஆசிப் மற்றும் அவரது குடும்பத்தார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதில், எனது கணவர் மற்றும் அவரது பெற்றோர்கள் என்னை முஸ்லீமாக மாறுமாறு கட்டாயப்படுத்துகின்றனர். மேலும் இஸ்லாத்தை கற்றுக் கொள்ள என்னை வலுக்கட்டாயமாக மதரஸாவில் ஒரு மாதம் தங்க வைத்தனர். முஸ்லீம் மதத்திற்கு மாறவில்லை என்றால் என்னுடைய ஆபாச வீடியோவை வெளியிடப்போவதாக மிரட்டுகிறார்கள் என்று புகாரில் கூறியுள்ளார்.

புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிபின் தந்தை மற்றும் தாயை கைது செய்து செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேப்டனுக்கு "குட்பை" - அதிர்ச்சியில் விஜயகாந்த்