Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரப்பான்பூச்சியை காட்டி கட்டாய உடலுறவு: கணவன் மீது மனைவி பரபரப்பு புகார்!

கரப்பான்பூச்சியை காட்டி கட்டாய உடலுறவு: கணவன் மீது மனைவி பரபரப்பு புகார்!

Webdunia
சனி, 21 ஜனவரி 2017 (13:04 IST)
பெங்களூரில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியை கரப்பான்பூச்சியை காட்டி மிரட்டி கட்டாய உடலுறவு செய்ததாக காவல்நிலையத்தில் புகர் அளிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


 


பெங்களூரு இந்திரா நகரில் வசித்து வருகின்றனர் அவினாஷ் சர்மா, சுஜாதா தம்பதியினர். திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆன இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அவினாஷ் சர்மாவுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது அவரது மனைவி சுஜாதாவுக்கு தெரிய வர அன்றில் இருந்து அவருடன் உடலுறவில் ஈடுபட மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் சுஜாதா இந்திரா நகர் காவல் நிலையத்தில் தன்னுடைய கணவர் கரப்பான்பூச்சியை காட்டி தன்னை மிரட்டி கட்டாய உடலுறவில் ஈடுபடுவதாக புகார் அளித்துள்ளார். சுஜாதாவிற்கு கரப்பான்பூச்சி போபியா இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவரது கணவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக போலீசார் கூறியுள்ளனர்.
 
இதனையடுத்து சுஜாதா தனக்கு கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என கேட்டும் அதற்கு அவினாஷ் சர்மா மறுத்துள்ளார். இதனையடுத்து இவர்களின் புகார்களை புகாரை கொண்டு பெண்கள் ஆலோசனை மையத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டதை அடுத்து இருவருக்கும் தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்