Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருந்து கடைகளில் பீர் விற்பனை செய்ய....: நடிகை ரோஜா சரமாரி கேள்வி!

மருந்து கடைகளில் பீர் விற்பனை செய்ய....: நடிகை ரோஜா சரமாரி கேள்வி!

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (15:08 IST)
ஆந்திராவில் அம்மாநில கலால் துறை அமைச்சர் பேசிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா இது குறித்து சரமாறியாக கேள்வி எழுப்பியுள்ளார்.


 
 
ஆந்திர கலால் துறை அமைச்சர் கே.எஸ்.ஜவஹர் தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் பீர் ஆரோக்கிய பானம் இல்லை என யார் சொன்னது? அது ஆரோக்கிய பானம் தான் என்பதை நிரூபிக்க நான் தயாராக உள்ளேன் என கூறினார்.
 
மதுவுக்கு ஆதரவாக அமைச்சரின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ளார் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா.
 
பீர் ஆரோக்கியமான பானம் என்றால் அதை மருந்து கடைகளில் விற்பார்களா? அரசு மது விற்பனையை ஊக்குவித்து வருகிறது. மக்கள் மீது அக்கறை இல்லை. 85 பார்களுக்கு அனுமதி கொடுத்துள்ளனர். மாநிலை வருவாயை பெருக்க மது விற்பனைதான் ஒரே வழி என்று முடிவு செய்துவிட்டனர் என ரோஜா தெரிவித்தார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments