Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் மீதான வழக்கு – பெப்சிகோ நிறுவனம் வாபஸ் பெற முடிவு ?

Webdunia
வெள்ளி, 3 மே 2019 (08:59 IST)
குஜராத் விவசாயிகள் மீது காப்புரிமைப் பெற்ற உருளைக் கிழங்குகளை அனுமதி இல்லாமல் பயிரிட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை பெப்சிகோ நிறுவனம் வாபஸ் பெறப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத்தில் காப்புரிமை பெறப்பட்ட எஃப்.சி.5 ரக உருளைக் கிழங்கை விவசாயிகள் தங்கள் அனுமதியின்றி பயிரிடுவதாக கூறி 9 விவசாயிகள் மீது பெப்சிகோ இந்தியா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்தது. மேலும் விவசாயிகளிடம் இருந்து நஷ்ட ஈடாக 1.5 கோடி ரூபாய் கேட்டது.

இந்த விஷயம் நாடெங்கும் உள்ள விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயம் தேசிய ஊடக்ங்களில் செய்தியான போது குஜராத் அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவோம் எனக் கூறியது. பெப்ஸிகோ நிறுவனம் குறிப்பிட்ட உருளைக் கிழங்கை தங்கள் நிறுவனத்துடன் இணைந்து பயிறிடுமாறு அழைப்பு விடுத்தது.

இதையடுத்து அரசு தலைமையில் விவசாயிகள் மற்றும் பெப்சிகோ நிறுவனத்துக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சுமூக எடுக்கப்பட்டு விட்டதாகக் கூறி பெப்ஸிகோ நிறுவனம் விவசாயிகள் மீதான வழக்கை வாபஸ் பெற இருக்கிறது. இது தொடர்பாக இந்திய செய்தி தொடர்பாளர் ’ இந்த பிரச்சனையில் சுமுகமான, நீண்ட காலத் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையை நாங்கள் பெரிதும் நம்பியிருக்கிறோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments