Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக-வுடன் ஒருபோதும் கூட்டனி இல்லை - மம்தா பானர்ஜி

Webdunia
ஞாயிறு, 4 மே 2014 (18:29 IST)
கொல்கத்தாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி ஒருபோதும் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டாணி இல்லை என்று  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 
ஹூக்ளி மாவட்டத்தில் ஸ்ரிரம்போரே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட  நரேந்திர மோடி, பிற மாநிலங்களில் இருந்து மேற்குவங்காளத்திற்கு வந்து வசிக்கும் மக்களை மம்தா பானர்ஜி விரும்பவில்லை, ஆனால் வங்கதேசத்தில் இருந்து மக்கள் வரும்போது அவருடையை முகம் பிரகாசமாகிறது என்று பேசியிருந்தார்.
 
இதற்கு பதில் அளித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, 'மேற்கு வங்கத்தில் சில அரசியல் கட்சிகள் கலகங்களை தூண்டிவிட விரும்புகிறது. 
 
மதம் மற்றும் மொழியின் அடிப்படையில் மக்களை பிரிக்க விரும்புகிறது. உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மக்கள் மேற்கு வங்கத்தில் வசிக்கின்றனர். அவர்களை நாங்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் போல தான் கருதுகிறோம். 
 
நாங்கள் மக்களை மதம், ஜாதி, மொழி போன்ற  வேறுபாடுகளை வைத்து பிரித்து பார்ப்பதில்லை. நாங்கள்  ஒருபோதும் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை என அவர் பேசினார்.
 
 

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments