Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவனை கட்டிப்போட்டு ஆணுறுப்பில் சிகரெட் சூடு வைத்த மனைவி.. அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!

Mahendran
செவ்வாய், 7 மே 2024 (13:33 IST)
கள்ளக்காதலை தட்டிக் கேட்ட கணவனை மயக்க மருந்து கொடுத்து அடித்து துன்புறுத்தியதோடு ஆணுறுப்பில் சிகரெட் சூடு வைத்த மனைவியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்ததை அவரது கணவன் கண்டுபிடித்து கண்டித்ததை அடுத்து ஆத்திரமடைந்த மனைவி, கணவனுக்கு பாலில் மயக்கம் மருந்து கொடுத்து உள்ளார்.  மனைவி இப்படிப்பட்டவள் தான் என்பதை ஏற்கனவே அறிந்து வைத்திருந்த கணவன் சிசிடிவி பொருத்திருந்த நிலையில் மனைவிக்கு தெரியாமல் வைத்திருந்த அந்த சிசிடிவியில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசில் ஒப்படைத்து இருக்கிறார்.

அந்த சிசிடிவியில் கணவனை கட்டிப்போட்டு மனைவி அடித்து துன்புறுத்தும் காட்சி, சிகரெட்டால் ஆணுறுப்பில் சூடு வைத்த காட்சி இருப்பதை அடுத்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவருடைய மனைவியை கைது செய்துள்ளனர்.

அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் இது குறித்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கள்ளக்காதலை கண்டித்த கணவனை மனைவி அடித்து துன்புறுத்திய சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments