Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் திடீரென செயலிழந்த வாட்ஸ்-அப்: பெரும் பரபரப்பு

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (06:46 IST)
இந்தியா உள்பட ஒருசில நாடுகளில் திடீரென 3 மணி நேரம் வாட்ஸ்அப் செயலிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
உலகம் முழுவதும் மிக அதிகமானோர் பயன்படுத்தும் மெசஞ்சர் செயலி வாட்ஸ்அப் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த செயலியில் மில்லியன் கணக்கானோர் பயனாளிகளாக உள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் நேற்று திடீரென இரவு 11.30 மணிக்கு வாட்ஸ்அப் இயங்காமல் போய்விட்டதாக பலர் புகார் அளித்தனர் 
 
இதுகுறித்து வாட்ஸ்அப் எந்தவிதமான விளக்கத்தையும் கொடுக்கவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ்அப் இயங்காமல் இருக்கலாம் என செய்திகள் வெளியாகி உள்ளது. உலகம் முழுக்க இந்தியா மட்டுமின்றி லண்டன், அமெரிக்கா, இலங்கை, பிரேசில், நெதர்லாந்து, ஜெர்மனி, எகிப்து ஆகிய நாடுகளிலும் வாட்ஸ் அப் செயலிழந்தது என்றும் கொலம்பியா, கஜகஸ்தான், ஸ்வீடன், ரோமானியா, அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் வாட்ஸ்அப் செயலியை ஓப்பன் செய்யவே முடியவில்லை என்றும் செய்திகள் வெளியாகியது 
 
கிட்டத்தட்ட உலகம் முழுக்கும் 1.5 பில்லியன் மக்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியாமல் திணறியதாக கூறப்படுகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் இது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும் எந்த தொழில்நுட்பம் காரணமாக இயங்காமல் போனது என்பது குறித்து வல்லுனர்கள் கண்டுபிடிக்க முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது
 
ஆனால் மூன்று மணி நேரம் கழித்து மீண்டும் வாட்ஸ்அப் இயங்க தொடங்கியதால் அதன் பயனாளிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் 

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments