Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு தின அணிவகுப்பு; மேற்கு வங்கத்துக்கு அனுமதி மறுப்பு

Arun Prasath
வியாழன், 2 ஜனவரி 2020 (14:25 IST)
குடியரசு தினத்தன்று நடக்கவிருக்கும் அணிவகுப்பில் மேற்கு வங்க மாநில அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெறவிருக்கும் குடியரசு தின விழாவில் யூனியன் பிரதேசங்கள் உட்பட 56 அலங்கார ஊர்திகள் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டன. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் மாநிலங்கள் சார்பில் 16 ஊர்திகள் அமைச்சகங்கள் சார்பில் 6 ஊர்திகள் என, மொத்தம் 22 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் மேற்கு வங்க அலங்கார ஊர்தியில் அமைந்த காட்சிகள் பாதுகாப்பு அம்சங்களை மீறும் வகையில் இருப்பதாக ராணுவ அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ், மத்திய அரசு திட்டமிட்டு அலங்கார ஊர்தியை புறக்கணிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments