Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்திரிக்கையாளர்கள் இனி முன்கள பணியாளர்கள்! – மம்தா பானர்ஜி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 3 மே 2021 (16:38 IST)
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்க உள்ள நிலையில் பத்திரிக்கையாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆளுனரை சந்தித்து ஆட்சியமைப்பது குறித்து கோரியுள்ளார்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பத்திரிக்கையாளர்களை முன்கள பணியாளர்களாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மக்களுக்கு அவசர காலங்களில் உதவியாக விளங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் முன்கள பணியாளர்களாக அடையாளப்படுத்தபடுகின்றனர்.

இந்நிலையில் தற்போது மத்திய பிரதேசம், ஒடிசா மாநிலங்களை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பத்திரிக்கையாளர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments