Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமாச்சலப்பிரதேச முதல் அமைச்சர் வீரபத்ரசிங் மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு

Webdunia
புதன், 7 அக்டோபர் 2015 (11:17 IST)
இமாச்சலப்பிரதேச சுற்றுலாத்துறையை மேம்படுத்த முதல் அமைச்சர் வீரபத்ர சிங் தவறிவிட்டதாக பா.ஜ.க. குற்றஞ்சாட்டியுள்ளது.

 
இமாச்சலப்பிரதேச முதல் அமைச்சராக இருப்பவர் வீரபத்ரசிங். இவர் மீது பா.ஜ.க. ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியதை அடுத்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிரடி ஆய்வை மேற்கொண்டது.
 
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி வீரபத்ரசிங்கின் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்திருந்தது. இந்நிலையில் தனது அரசியல் எதிர்காலத்தை அழிக்கவே பா.ஜ.க. தொடர்ந்து புகார் கூறி வருவதாக வீரபத்ரசிங் குற்றஞ்சாட்டி இருந்தார்.
 
இதனிடையே ஹிமாச்சலப் பிரதேத சுற்றுலாத்துறையை வளர்ச்சிப்பாதையில் செலுத்த வீரபத்ரசிங் தவறிவிட்டதாக பா.ஜ.க. தலைவர் சன்ட குமார் குற்றஞ்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்," இமாச்சலப்பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முதலீட்டாளர்களை ஈர்க்க வீரபத்ரசிங் தவறிவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

Show comments