Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதக் கழிவை விண்கல் என நினைத்து பிரிட்ஜில் பத்திரப்படுத்திய கிராமத்தினர்

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (12:34 IST)
டெல்லியில் விமானத்தில் இருந்து விழுந்த மனிதக் கழிவை விண்கல் என நினைத்து அதனை பிரிட்ஜில் வைத்து பத்திரப்படுத்திய சம்பவம் பலரது கேலிக்கு உள்ளாகியுள்ளது.
டெல்லி அருகே உள்ள பாசில்பூர் பாடிலி என்ற கிராமத்தில், விமானத்திலிருந்து காய்ந்த நிலையில் மனிதக் கழிவு வயல்வெளியில் விழுந்தது. இதனையறிந்த கிராம மக்கள் அப்பகுதிக்கு சென்று அதனை பார்த்ததோடு, அதனை விசித்திர பொருள் என நினைத்து, கீழே கிடந்ததை எடுத்து வந்து தங்களின் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் இதனைப்பற்றி அறிந்த விஞ்ஞானிகள், அதன் மாதிரிகளை சேகரித்து, ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் அது மனித கழிவு என கண்டறியப்பட்டது. இதனையறிந்த கிராம மக்கள், தங்களின் வீட்டிற்கு, தெரியாமல் எடுத்துச் சென்ற மனித கழிவை தூக்கி எறிந்து வீடுகளை சுத்தம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments