Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதக் கழிவை விண்கல் என நினைத்து பிரிட்ஜில் பத்திரப்படுத்திய கிராமத்தினர்

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (12:34 IST)
டெல்லியில் விமானத்தில் இருந்து விழுந்த மனிதக் கழிவை விண்கல் என நினைத்து அதனை பிரிட்ஜில் வைத்து பத்திரப்படுத்திய சம்பவம் பலரது கேலிக்கு உள்ளாகியுள்ளது.
டெல்லி அருகே உள்ள பாசில்பூர் பாடிலி என்ற கிராமத்தில், விமானத்திலிருந்து காய்ந்த நிலையில் மனிதக் கழிவு வயல்வெளியில் விழுந்தது. இதனையறிந்த கிராம மக்கள் அப்பகுதிக்கு சென்று அதனை பார்த்ததோடு, அதனை விசித்திர பொருள் என நினைத்து, கீழே கிடந்ததை எடுத்து வந்து தங்களின் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் இதனைப்பற்றி அறிந்த விஞ்ஞானிகள், அதன் மாதிரிகளை சேகரித்து, ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் அது மனித கழிவு என கண்டறியப்பட்டது. இதனையறிந்த கிராம மக்கள், தங்களின் வீட்டிற்கு, தெரியாமல் எடுத்துச் சென்ற மனித கழிவை தூக்கி எறிந்து வீடுகளை சுத்தம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments