Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசலை மட்டும் திருப்பி கொடுக்கிறேன் : மனம் மாறிய விஜய் மல்லையா

Webdunia
புதன், 25 நவம்பர் 2015 (12:23 IST)
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தலைவர் விஜய் மல்லையா தான் வங்கிகளிடம் வாங்கிய கடனில், அசலை மட்டும் திருப்பி செலுத்த முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
 
யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் மற்றும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் தலைவர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளிடம் வாங்கிய கடன் தொகை சுமார் ரூ.7000 கோடியை திருப்பி தரவில்லை என்று அறிவித்த வங்கிகள், அவரை  “வேண்டும் என்றே கடனை திருப்பி தராத ஒரு மோசடியாளர்” என்று சமீபத்தில் அறிவித்திருந்தது.
 
மேலும், அந்நிறுவனம் கடன் வாங்கும் போது பிணையாக வைத்த சொத்துக்களை ஏலத்தில் விடப்படுவதாக வங்கிகள் அறிவித்தது. இந்த ஏலத்தை கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பாரத ஸ்டேட் வங்கி உள்பட 17 வங்கிகள் கொண்ட அமைப்பு நடத்துவதாக அறிவித்தது.
 
இந்நிலையில் வங்கிகளிடம் வாங்கிய கடனில் அசல் தொகையான சுமார் ரூ.4500-ரூ.5000 கோடியை மட்டும் திருப்பி தர விஜய் மல்லையா முடிவெடுத்துள்ளார். இதற்காக சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. 
 
அவர் செலுத்த வேண்டிய வட்டி தொகை மட்டும் ரூ.2000 கோடி. பாரத ஸ்டேட் வங்கி வட்டி தொகையை முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது என்றும் குறைந்த பட்ச வட்டி தொகையை மட்டுமாவது கிங்பிஷர் நிறுவனம், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments