Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள அமைச்சர் குவைத் செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பா? பரபரப்பு தகவல்..!

Mahendran
வெள்ளி, 14 ஜூன் 2024 (10:51 IST)
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதில் பெரும்பாலும் கேரளாவை சேர்ந்தவர்கள் தான் பலியாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் குவைத் செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில் மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
குவைத் நாட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் படுகாயம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து கேரளா அரசின் சார்பில் குவைத்திற்கு கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்களை அனுப்ப திட்டமிடப்பட்டது.
 
இந்த நிலையில் கேரளா செல்வதற்காக விமானத்திற்கு அமைச்சர் வீணா ஜார்ஜ் காத்திருந்த நிலையில் தான் குவைத் செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இக்கட்டான சூழலில் கூட மத்திய அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
 
ஏற்கனவே மத்திய அமைச்சர் குவைத் சென்று மீட்பு நடவடிக்கைகளை கவனித்து வரும் நிலையில் கேரள அமைச்சர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments