Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும் முதல் மாநிலம்.. இன்று முதல் அமல் என அறிவிப்பு..!

Siva
திங்கள், 27 ஜனவரி 2025 (09:33 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த சட்டத்தை அமல்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெற்றுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலின் போது பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில், பொது சிவில் சட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தை அமல்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடிவடைந்தது என்றும், இந்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வருவது உறுதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தை அடுத்து வேறு சில மாநிலங்களும் விரைவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் தமிழகம் உள்பட சில மாநிலங்கள் இந்த சட்டத்தை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பதும் தெரிந்ததே.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 வயது அரசுப் பள்ளிச் சிறுமிக்கு ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை: அண்ணாமலை கண்டனம்..!

ஆன்லைனில் புக் செய்தால் போதும்.. ஷோரூமில் இருந்து வீட்டுக்கே வரும் கார்.. புதிய வசதி..!

பழனிமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

சட்டவிரோத குடியேற்றம்! இந்தியர்களை கொண்டு வந்து விட்ட அமெரிக்க ராணுவம்! - இனி அவர்கள் நிலை என்ன?

எங்களை நாய் மாதிரி நடத்துறார்.. தளபதிய சுத்தி தப்பு நடக்குது! - புஸ்ஸி ஆனந்த் மீது தவெக நிர்வாகி குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments