Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரபிரதேசத்தில் ரயில் விபத்து - 23 பேர் மரணம்

Webdunia
ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017 (16:44 IST)
உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் மாவட்டத்தில் விரைவு ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர்.


 

 
நேற்று மாலை, ஓடிசா மாநிலம் புரியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு உத்கல் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. முசாஃபர் நகர் மாவட்டதிலிலுள்ள கதௌலி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயில் பெட்டிகள் தடம் புரண்டது. 
 
தடம் புரண்ட ரயில் பெட்டிகள் ரயில் பாதை அருகில் உள்ள வீடுகள் மீது மோதின. இதில் பல வீடுகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் 23 பேர் பலியானதாக கூறப்படுகிறது. அதேபோல், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிகிறது. 
 
இதனையடுத்து தேசிய பேரழிவு மீட்புப் படை வீரர்கள அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் பெட்டிக்குள் சிக்கியிருந்த அனைவரையும் கிரேன் வண்டி மூலம் அவர்கள் பத்திரமாக மீட்டனர்.
 
விசாரணையில், முன்னறிவிப்பின்றி தண்டவாளத்தில் ஊழியர்கள் பணி செய்து கொண்டிருந்ததால், அதைக் கண்ட ரயில் ஓட்டுனர் திடீரென பிரேக்குகளை அழுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments