Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்திரப்பிரதேசத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 3 குழந்தைகள் பலி

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (12:58 IST)
உத்திரப்பிரதேசத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


 
 
உத்தரபிரதேச மாநிலம் முஷாபர் நகரில் தான் இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளது. இந்த கோர விபத்தில் அந்த வீடே முழுவதுமாக இடிந்து விழுந்தது. இதில் மூன்று குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
 
எரிவாயு கசிவே விபத்திற்கான காரணம் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் இடையே சிக்கிய குழந்தையின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பலத்த காயமடைந்த நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறி மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் முஷாபர்நகரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments