Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடுப்பி என்கவுண்ட்டர்: மாவோயிஸ்ட் தலைவன் விக்ரம் கவுடா சுட்டுக்கொலை!

Prasanth Karthick
செவ்வாய், 19 நவம்பர் 2024 (14:03 IST)

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள், போலீஸார் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் விக்ரம் கவுடா கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு எல்லைகளை இணைக்கும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவ்வபோது மாவோயிஸ்டுகளை கேரள, ஆந்திர போலீஸார் சுட்டுப்பிடிக்கும் சம்பவங்களும் நடக்கிறது.

 

நேற்று கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கப்பினாலே வனபகுதியில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் உள்ளதாக கர்நாடகா போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து இரவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் நடுவே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
 

ALSO READ: வங்கக்கடலில் மீண்டும் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?
 

இந்த துப்பாக்கிச் சண்டையில் சில மாவோயிஸ்டுகள் சுடப்பட்டு இறந்தனர். அவர்களில் மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர்களில் ஒருவனான விக்ரம் கவுடாவும் இறந்துள்ளதாக கர்நாடகா போலீஸார் உறுதி செய்துள்ளனர். கவுடாவின் குழுவில் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களை கண்டறிய போலீஸார் முயன்று வருகின்றனர்.

 

விக்ரம் கவுடா கொலை செய்யபட்டதால் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மேலும் குறையும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். 2005ம் ஆண்டில் மாவோயிஸ்ட் சாகேத் ராஜன் கொல்லப்பட்டதற்கு பிறகு நடந்த முக்கியமான என்கவுண்ட்டராக இது பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 10 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லையா விஜய்? விளாசும் நெட்டிசன்கள்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? ஆட்சி அதிகாரத்தில் பங்கா? நயினார் நாகேந்திரன் பதில்..!

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

அடுத்த கட்டுரையில்
Show comments