கோவில் திறப்புக்கு பதிலாக கொரோனாவுக்கு போராடுங்கள்! – உத்தவ் தாக்கரே கறார் பதில்!

Webdunia
ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (14:51 IST)
கொரோனா காரணமாக மகாராஷ்டிராவில் கோவில்களை திறக்க முடியாது என உத்தவ் தாக்கரே கண்டிப்புடன் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மூன்றாவது அலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களிலும் கோவில்கள் திறப்பது, விநாயகர் சதுர்த்தி போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் கோவில்களை திறக்க வேண்டும் என்றும், விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் பாஜக உள்ளிட்ட கட்சியினர் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே “மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் குறையும் வரை கோவில்கள் திறக்கப்படாது. கோவில்களை திறக்க சொல்லி போராடுவதற்கு பதிலாக கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவர் விடுவிப்பு: என்ன காரணம்?

பாராளுமன்ற கூட்டத்தொடரின் நடுவே ராகுல் காந்தி ஜெர்மனி பயணம்: வெளிநாட்டு நாயகன் என பாஜக விமர்சனம்..!

மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன்.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் அசத்தும் விருந்து!

நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழக்க வைக்க செய்வோம்: செங்கோட்டையன் சவால்

2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments