Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 டன் தக்காளியை லாரியோடு கடத்திய மர்ம நபர்கள்: சிசிடிவி மூலம் போலீசார் விசாரணை..!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (12:20 IST)
2 டன் தக்காளியை மர்ம நபர்கள் லாரியோடு கடத்திய நிலையில் சிசிடிவி காட்சிகளின் மூலம் அந்த லாரியை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 
 
தக்காளி விலை தற்போது தங்கம் விலை போல் உயர்ந்துள்ளது என்பதை அடுத்து தங்கத்தை கடத்துவது போல் தற்போது தக்காளியையும் கடத்த தொடங்கிவிட்டனர்.
 
ஏற்கனவே தக்காளி கடைக்காரர் ஒருவர் பவுன்சர் பாதுகாப்பை போட்டிருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் விளைந்த ரூ.2.5 லட்சம் மதிப்பில் ஆன இரண்டு டன் தக்காளியை விற்பனைக்காக மார்க்கெட்டுக்கு லாரியில் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது திடீரென மர்மநபர்கள் அந்த விவசாயியை தாக்கி லாரியுடன் தக்காளியை கடத்தி சென்று விட்டனர். இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மையாகிறது யமுனை நதி.. பதவியேற்கும் முன்னரே பணிகள் தொடக்கம்..!

ஒரு மணி நேரம் லிப்டில் சிக்கிய கடலூர் காங்கிரஸ் எம்பி.. தீயணைப்பு துறையினர் மீட்பு..

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உதவித்தொகை ரூ.2000.. அண்ணாமலை வாக்குறுதி

அமெரிக்காவில் திடீர் கனமழை.. வெள்ளத்தில் 9 பேர் பலி.. 39,000 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு..!

டெல்லி நில அதிர்வு குறித்து பதட்டம் வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

அடுத்த கட்டுரையில்
Show comments