Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 டன் தக்காளியை லாரியோடு கடத்திய மர்ம நபர்கள்: சிசிடிவி மூலம் போலீசார் விசாரணை..!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (12:20 IST)
2 டன் தக்காளியை மர்ம நபர்கள் லாரியோடு கடத்திய நிலையில் சிசிடிவி காட்சிகளின் மூலம் அந்த லாரியை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 
 
தக்காளி விலை தற்போது தங்கம் விலை போல் உயர்ந்துள்ளது என்பதை அடுத்து தங்கத்தை கடத்துவது போல் தற்போது தக்காளியையும் கடத்த தொடங்கிவிட்டனர்.
 
ஏற்கனவே தக்காளி கடைக்காரர் ஒருவர் பவுன்சர் பாதுகாப்பை போட்டிருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் விளைந்த ரூ.2.5 லட்சம் மதிப்பில் ஆன இரண்டு டன் தக்காளியை விற்பனைக்காக மார்க்கெட்டுக்கு லாரியில் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது திடீரென மர்மநபர்கள் அந்த விவசாயியை தாக்கி லாரியுடன் தக்காளியை கடத்தி சென்று விட்டனர். இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட விழுப்புரம் அம்மன் கோவில்.. பட்டியல் இன மக்கள் வழிபாடு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

அடுத்த கட்டுரையில்
Show comments