Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை போலீஸால் திக்குமுக்காடும் உயரதிகாரிகள்: கேரளாவில் ருசிகரம்

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (10:41 IST)
கேரளாவில் ஒரே காவல் நிலையத்தில் இரட்டையர்கள் வேலை செய்வது அவர்களது உயரதிகாரிகளை திக்குமுக்காட வைத்துள்ளது.
 
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் சிசிது. இவரது சகோதரர் சித்தோ. இருவரும் இரட்டையர்கள் ஆவர். சிறுவயதிலிருந்தே இருவரும் போலீஸ் ஆக வேண்டும் என்ற வெறி இருந்தது.
 
பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த இவர்கள் போலீஸ் ஆவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். விடாமல் படித்து போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். 2011-ம் ஆண்டு சிதோ போலீஸ் வேலையில் சேர 2012-ல் சிசிது வேலைக்கு சேர்ந்தார்.
 
இருவரும் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கரிப்பூரா போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். உயரதிகாரிகள் இவர்களில் யாரிடம் அந்தந்த வேலையை கொடுத்தோம் என்று தெரியாமல் திகைத்து வருகிறார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments