Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன் மீது அமலாக்கத்துறையை ஏவி விட முயற்சி..! தவறான தகவல்களை பரப்புவதாக ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி..!!

Senthil Velan
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (12:32 IST)
தன் மீது அமலாக்கத்துறையை ஏவி விட மத்திய அரசு முயற்சிப்பதாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் பதிலடி கொடுத்துள்ளார். ராகுல் காந்தி தவறான தகவல்களை பரப்புவதாக அவர் கூறியுள்ளார்.
 
நாடாளுமன்ற கூட்டத்தில் நான் பேசிய போது  இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள், பழங்குடி நலன் தொடர்பான திட்டங்கள் ஏதுமில்லை என்றும்  இது மத்திய அரசுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
 
அமலாக்கத்துறை ஏவி விட திட்டம்:
 
இதன் காரணமாக என் மீது அமலாக்கத்துறையை ஏவி விட்டு சோதனை நடத்த முயற்சிப்பதாக எனக்கு தகவல்கள் வருகிறது என்றும் நான் திறந்த கரங்களோடு உங்களை வரவேற்கிறேன் என்றும் ராகுல் கூறியிருந்தார்.
 
பொய் பேசுகிறார் ராகுல்:
 
இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள, மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங், நாடாளுமன்றத்தில் ராகுல் பொய் பேசுகிறார் என்று தெரிவித்தார். வெளியே, அவர் தவறான தகவல்களை பரப்புகிறார் என்றும் கூறினார்.

ALSO READ: வயநாட்டில் 300-ஐ தாண்டியது பலி எண்ணிக்கை.! மேலும் 240 பேரின் கதி என்ன.? தொடரும் தேடுதல் வேட்டை..!!
 
எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி இருப்பது நாட்டின் துரதிர்ஷ்டம் என்று குறிப்பிட்ட அமைச்சர் கிரி ராஜ் சிங், அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க முயற்சி நடந்து வருவதாக கூறி வந்த ராகுல், தற்போது அந்த முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளார் என்று விமர்சித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments